Wednesday, November 8, 2017

Ramanamame Jeevanamu

ராம நாம மந்திரத்தின் ஏற்றத்தை உலகுக்கு தெரியச் செய்த நாரதரின் கலகத்தை நாம் எல்லோரும் அறிவோம். காசி மன்னனை பகடைக்காயாக ஆக்கி, ராம ஹனுமானின் போரைத் துவக்கி, ராம நாம ஸித்தாந்தை உலகு அறியச் செய்தார் அன்று.
பாபனாசம் சிவனின் க்ருதியை நாம் மனமுருகப் பாடினால் ஜகத்குரு பகவன்நாம போதேந்திர ஸ்வாமிகளின் காலத்தில் நடந்த சில நிகழ்வுகள் நம் கண்முன் ஒளிக்கும்.
ராம நாம அம்ருத பானமே நாவுடையோர் உயர் ஜீவனமே
உரைக்க உரைக்க உடல் எல்லாம் இனிக்குமே
ஊமையல்லாவதர்க்கும் எளிது -ஸ்ரீ
(ஊமையை உரைக்கவைத்த ராம நாம் என்று எழுதியிருந்தால் அது மிகையாகாது. போதேந்திர ஸ்வாமிகளின் சீடரிலிருந்து அறியலாம்.)
எட்டு எழுத்திற்கும் உயர் ஐந்தெழுத்திற்கும் – இவ
இரண்டெழுத்தே உயிராகும் -இத்
தாரக மந்திரம் ஈசன் காசிபதியில்
உபதேசம் செய்த வைபவம் கொண்ட அதிமதுர

                        19ம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு புத்தகத்தின் நகலை இங்கே தந்துள்ளேன். “திருநெய்தானம் நரசிம்ம பாகவதரால்” தொகுக்கப்பட்ட இந்த புத்தகம், காகிதத் துகள்களிருந்து புனருத்தாருணம் செய்யப்பட்டது.


போதேந்திர சரஸ்வதி (Bodhendra Saraswathi, 1610-1692) தமிழ்நாடு மாநிலத்தின், காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் 60வது பீடாதிபதியாவர். 17வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கோவிந்தபுரத்தில் விதேகமுக்தி அடைந்தவர். சதாசிவ பிரமேந்திரர் மற்றும் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியோர்களின் சமகாலத்தவர்.
போதேந்திர சரசுவதி, கேசவபாண்டுரங்க யோகி - சுகுணா இணையருக்கு 1610இல் காஞ்சிபுரத்தில் புருசோத்தமன் எனும் இயற்பெயருடன் பிறந்தவர். காஞ்சி சங்கர மடத்தின் 59வது மடாதிபதியான விஸ்வகேந்திர சரசுவதி சுவாமிகள், மெய்யறிவு நிரம்பிய புருசோத்தமனின் திறமையைப் பாராட்டி, சங்கரமடத்தின் இளைய மடாதிபதியாக, போதேந்திர சரசுவதி என்ற புதிய பெயர் சூட்டி நியமித்தார். ஆத்மபோதர் எனும் குருவால் பயிற்றுவிக்கப்பட்ட போதேந்திர சரசுவதி சுவாமிகள், இளம் வயதிலே சுருதி மற்றும் ஸ்மிருதி ஆகிய இந்து சமய வேத சாத்திரங்களில் தேர்ச்சி பெற்றார். நாள்தோறும் ஒரு இலட்சம் இராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருப்பர்.
போதேந்திர சரசுவதி சுவாமிகள், தனது முதுமைக் காலத்தில் காவேரி ஆற்றாங்கரையில் அமைந்த தஞ்சாவூர் பகுதியின் கோவிந்தபுரம் எனும் கிராமத்தில் வாழ்ந்தார். இக்கிராமத்திலேயே சமாதி அடைய முடிவெடுத்தார்.1692ஆம் ஆண்டு புராட்டாசி மாதம் போதேந்திர சரசுவதி சுவாமிகள் யோக நிலையில் அமர்ந்து சீவசமாதியில் இருந்தார்.1962ஆம் ஆண்டில் முழு நிலவு நாளான்று விதேக முக்தி அடைந்தார். போதேந்திர சரசுவதி சுவாமிகளின் சமாதியை காஞ்சி சங்கர மடத்தினர் பராமரிக்கிறார்கள்.
(கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது)
ஸ்ரீ காமகோடி பீடாதிபர்களான விஸ்வாதிகேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் திரு.புருஷோத்தமனை போதேந்திர ஸரஸ்வதியென்று பெயரிட்டு மடத்திற்கு 60வது இளவரசாக்கி மந்திர உபதேசம் செய்தார். அவரது சொல்படி லக்ஷ்மீதரக்கவியின் “ஸ்ரீபகவந்நாம கௌமுதி” என்ற அறிய க்ரந்தத்தை இவ்வுலகிற்கு அளித்த அந்த வ்ருத்தாந்தத்தை நாம் அறியலாம். காசியாத்திரைக்குச் சென்ற ஒரு ப்ராமண தம்பதி, ஒரு ம்லேச்சனிடம் தனது மனைவியை பறிகொடுத்து, பின்பு லக்ஷ்மீதரக்கவியின் மகன் சொல்படி, ராம நாமத்தை உரைத்து மனைவியையும் அதனால உயர்ந்த பதவியையும் பெற்ற அந்த தம்பதியை கண்ட போதேந்திர ஸ்வாமிகள், ஒரே இரவில் “ஸ்ரீபகவந்நாம கௌமுதி” க்ரந்தத்தை படித்து மனதில் வாங்கிக் கொண்டு, அந்த நூலை நமக்கு அளித்துள்ளார். ஊமையை ராம நாமத்தின் மூலமாக பேசவைத்த போதேந்திர ஸ்வாமிகளின் அறிய செயலை நாம் அறியாலாம். மூன்று முறை உறைக்கச் சொன்ன மகனிடம், லக்ஷ்மீதரக்கவியின் மனைவி, ராம நாமத்தை ஒரு தரம் உறைத்தாலே உன்னத பதவியை அடையாலாம் என்றார்.
Click here to view the book / download Bagwan Nama Kaumudhi
அப்படிப்பட்ட அந்த ராம த்யானத்தை பத்ராசல ராமதாஸர் எவ்வாறு அனுபவித்தார் என்பதை உங்களுடன் பாடி மகிழ்கிறேன்.



No comments:

Post a Comment