Sunday, December 24, 2017

Musical Trapeze - Corporate Music or Carnatic Music ?

நானும் என் நண்பரும் ஒரு முன்னணிப் பாடகரின் கச்சேரிக்குச் சென்றிருந்தோம்
நான் பாடுவேன். நாம சங்கீர்த்தனம் செய்யும் எனக்கு கர்நாடக சங்கீதத்தில் அவ்வளவு பாண்டித்யம் கிடையாது. கேள்வி ஞானத்தில் ராக சாயயை வைத்துக் கொண்டு இந்த ராகம் என்று ஒரு ஹேஷ்யத்தில் சொல்லுபவன் நான்
என்னுடன் வந்தவர் முன்னணிப் பாடகர்களிடம் சிக்ஷை பெற்றவர். ராகம், கற்பனை ஸ்வரம் கையாள்வது, கணக்கு வழக்கில் கைதேர்ந்தவர். முன்னணிப் பாடகர் கத்தனு வாரிகி என்ற தோடி ராக கீர்த்தனையை ஆரம்பித்தார்.
தோடி ராகத்தில் அருமையான கோர்வையுடன் ராக ஆலாபனை. COPY BOOK STYLE என்பார்கள். அந்த பாணியில் இந்த சங்கதிக்குப் பிறகு இந்த சங்கதிதான் என்று சொல்லும் அளவிற்கு ஒரு சிட்டையான சங்கீதம். ஒரு ஆயிரம் தடவை கௌளி கொட்டுவது போல்சோ ச் சாஎன்ற சக ரசிகர்களின் ஒரு பாராட்டு. அவர் ஆலாபனை முடிப்பதற்காக மந்த்ர ஸ்தாயி போய் முடிக்கலாம் என்று நினைப்பதற்குள் ஒரு கை தட்டல். ஹாரிமோனியத்தில் Reeds உள்ளது போல் குரல். மூன்று Octaveலும் சஞ்சாரம். மேல் ஸ்தாயில் ஒரு தெய்வீகப் பெண் குரல். கீழ் ஸ்தாயில் கொஞ்சம் புளிச்ச மோர் சாப்பிட்ட வடு. நடு ஸ்தாயியில் அங்கங்கே ஸ்ருதியுடன் சேர்ந்த ஒரு ப்ரமிப்பு. ஒரு வழியாக ஆலாபனை அரிசிப்பானைக்குள் சென்றது. வில்லின் வல்லர் வயலின் வித்வான், தன்னை “Yahudi Menuhin” அளவிற்கு தன்னை நிறுத்திக் கொண்டு, சுவற்றில் பேளாடால் கீறினால் ஏற்படும் ஒரு புளகாங்கித்தை தனது வில்லினால் ஏற்படுத்தி ஒரு அருமையான “Applause” கேட்டு வாங்கிக் கொண்டார். அரங்கம் அதிர்ந்தது. பாவம் ம்ருதங்கம் அரங்கத்தின் குளிரில் நடுங்கி மப்ளர் போர்த்திக் கொண்டிருந்தது. ம்ருதங்க வித்வான் ம்ருதங்கத்தை குழவிக் கல்லால் சிறிது தாஜா பண்ணி வாசிக்க ஆரம்பித்தார். Circus Trapeze தொடங்கிற்று.
பாவம் த்யாகராஜர் க்ருதி.
பாடகர், வயலின் வித்வான், ம்ருதங்க வித்வான், கடம் மற்றும் முகர்சிங் என்று பலதரப்பட்ட வித்வான்களிடம் வேகம், நளினத்தாலும் கீழே விழாமல் பல கைதட்டல்களுடன் மிகவும் வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது. அரை இடம் முக்கால் இடத்தில்ஸ்வரப் ப்ரஸ்தாரத்தைஅமர்க்களமாக கைமாற்றி அரங்கத்தை அதிரச் செய்தார். பிறகு வித்வான் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு ரசித்து ருசித்து ஏதோ ஒரு த்ரவத்தை சுவைத்தபடி மற்றொறு கையால் குத்து மதிப்பாக ஒரு தாளம். ம்ருதங்கம், கடம், முகர்சிங்க் இவர்களிடம் மேலும் உள்ள சுழற்சிகளை விட்டு விட்டார். மூவரும் பிய்த்து விட்டார்கள். அரங்கம் கைதட்டலில் அசந்து விட்டது. உடன் வந்தவர்சார் கச்சேரி எப்படி? என்று வினவினார். முன்னணிப் பாடகர், என்னுடன் வந்தவரின் favourite musician.
என் நண்பர் சொன்னார்ஒரே ப்ருகா சார்”, எப்படி?” என்றார்.
என்னுள் வெளியில் சொல்லமுடியாத ஒரு கணிப்பு.
ஸ்ருதி அங்கங்கே சேர்ந்தது. தாளம் ஒன்று இரண்டு அக்ஷரம் தவறினால் ம்ருதங்கக்காரர் கவனித்துக் கொள்ளமாட்டாரா என்ன? என்பது தான் அந்த கணிப்பு.  
பாவம் த்யாகராஜர், என்ன நினைத்துப் பாடினாரோ, அந்த Bhavam, அர்த்தம் கச்சேரியில் பாவமாக அமர்ந்தது.  வீட்டிற்கு வந்து பாடலின் அர்த்தம் என்ன என்று சிறிதே பார்த்தேன். என் மனதில் உள்ள இருக்கமான உணர்விற்கு மாற்றாக இருக்கும் என்று அங்கு சென்றால் ஒரு அருமையான ஒரு Circus Trapeze Show வைப் பார்த்த ஒரு அனுபவம் தான் கிடைத்தது.
எனது இல்லத்திற்கு ஒருவர் வந்திருந்தார். அவர் வாழ்க்கையில் பல ப்ரச்சனைகள். அவரது ப்ரச்சனைகளைப் பார்க்கையில், கடவுளுக்கு பல Thanks சொன்னேன். “தெய்வம்" என்று வாஸ்தவமாகவே ஒன்று இருக்கறதா? என்று என்னை, அந்தரங்கமாக, அந்த ஆஸ்திக நண்பர் வினவினார். வாழ்வில் பல துன்பங்களைக் கண்டவர். அந்த துன்பங்கள் மேலும் அவருக்கு தொடர்கின்றது. கடவுள் நம்பிக்கையில் திளைத்து ஏமாந்தவர். ஏமாற்றமும் கோபமும் அடைந்த அவர்பக்தி பக்தி என்று பிறர்க்கு சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே உம்முடைய பக்தி எங்குள்ளது என்றார். “வாஸ்தவம், தெய்வத்தை நான் கண்டிருந்தால் உம்மிடம் ஏன் இப்படிப் பேச வருவேன் என்றேன். அவரோ சமாதானம் அடையாமல் சென்றார். கத்தனுவாரி விஷயத்துக்கு வருவோம்.
---------------------------------------------------------------------------------------------------------------
பல்லவி
கத்3(3)னு வாரிகி கத்3து3 கத்3(3)னி மொரல(னி)டு3
பெத்33ல மாடலு நே(ட3)3த்34(மௌ)னோ
அனுபல்லவி 
அத்33ம்பு செக்கிள்ளசே முத்3து3 காரு மோமு ஜூட3
பு3த்3தி4 கலிகி3(ன)ட்டி மா வத்33 ரா(வ)தே3மிரா (க)
சரணம்
 நித்3து3ர நிராகரிஞ்சி முத்3து33 தம்பு3ர பட்டி
ஸு1த்34மைன மனஸுசே ஸு-ஸ்வரமுதோ
பத்3து3 தப்பக ப4ஜியிஞ்சு ப4க்த பாலனமு ஸேயு
தத்3-3ய-ஸா1லிவி நீவு த்யாக3ராஜ ஸன்னுத (க)
--------------------------------------------------------------------------------------------------------------------
உண்டு என்று சொல்பவர்களுக்கு உண்டு. உண்டு என்றால் ஏன் எளிதில் கண்ணில் படுவதில்லை. நான் பார்க்க விரும்புவது அந்த தெய்வத்தின் அழகிய தோற்றத்தை. கண்ணாடி போல் மின்னும் கன்னங்களுடன் ஒளிமிகுந்த அவன் முகத்தைக் காண, புத்தி கொண்டு எங்கும் எங்கள் முன் வராமல் இருப்பானேன். ஸர்வேஸ்வரனின் அகண்ட ஸச்சிதானந்த அதிசயத்தைக் காண இயலாதவனாயினும் ராம, க்ருஷ்ணாதி அவதாரங்களில் அவன் ஏற்ற ஸுகுணாகர சுக ஸ்வரூப தர்சனமாவது எனக்குக் கிடைக்காதா?
தூக்கத்தை விட்டு, நன்றாகத் தம்புராவை ஸ்ருதி சேர்த்து அமைத்து சுத்தாமான மனதுடன் ஸுஸ்வரமாக
ஸம்ப்ரதாயப்படி பஜனை செய்தால், 
அவ்வாறு தன்னை பஜிப்பவரை பாதுகாக்கும் மகா தயவுள்ள மூர்த்தி, நிச்சயம் தரிசனம் அளிப்பார் என்பது பெரியோர்களின் வாக்கன்றோ.
த்யாகராஜனால் இந்த அனுபவம், கண்டு கொண்டாடப்படும் இந்த ராமபிரான், நிச்சயம்உள்ளான்என்பவர்க்கு உள்ளான்.

த்யாகராஜன் உண்டு என்பவருக்கு ஸ்ரீராமபிரான் உண்டு. பக்தியும் உண்டு. நல்ல சங்கீதமும் உண்டு
ஏனைய மற்றவர்களுக்கு………   ? உங்கள் கணிப்பிற்கு விட்டுவிடுகிறேன்.
இக்கால கட்டத்தில் நாம் கேட்கும் கர்நாடக சங்கீதம், ஒரு தெய்வீக அம்சம் இருப்பது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்துகிறது !
ப்ரமையா ? உண்மையா


Tuesday, December 5, 2017

Trijata's Dreams and Seetha's Anguish

த்ரிஜடையின் சொப்பனம்
பிரஜாபதி புலஸ்தியரின் பேரன் விஸ்ரவ முனிவருக்கும் - அசுர குலத் தலைவர் சுமாலியின் மகள் கேகசிக்கும் பிறந்தவர்களே இராவணன், விபீடணன் கும்பகர்ணன் மற்றும் சூர்ப்பனகை ஆவர். 
விபீஷணன் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய கதை மாந்தர். இவரது மகள் திரிசடை ஆவார். இவன் இராவணனின் தம்பி ஆவான். நீதி நியாயத்தின் படி வாழ்ந்து வந்தான். சீதையை இராவணன் கடத்தி வந்த போது அநியாயம் என்று எடுத்து உரைத்தான். சீதையை விட்டுவிடுமாறு பல ஆலோசனைகள் கூறினான். ஆனால் இராவணன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பாத விபீடணன், அன்னை கேகசியின் அறிவுரைப்படி, இராமனிடம் அடைக்கலம் அடைந்து அவனுக்கு உதவினான்.
சீதையை சிறை வைத்தபோது, த்ரிஜடை பாதுகாவலராக நியமிக்கப்பட்டாள். ராவணனின் துர்போதையினால் அரக்கிகள் சீதையை துன்புறுத்தியதால் கோபமுற்ற த்ரிஜடை தனது கனவினைப் பற்றி விவரமாக மற்ற அரக்கிகளுக்கு உரைக்கிறாள். அதன் தமிழாக்கம் பின்வருமாறு. ராமாயணத்தில் த்ரிஜடை ஒரு முக்கியமான கதா நாயகர்.

 



 
சீதையும், விபீஷணனின் பெண்ணான த்ரிஜடையும் அசோகவனத்தில் சம்பாஷித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சீதை த்ரிஜடையை நோக்கி, “ ஓ, த்ரிஜடை! புழுவானது இடைவிடாமல் வண்டை நினைத்துக் கொண்டிருப்பதால் அது வண்டாக மாறி விடும் என்று சொல்லப்படுவது உண்மையா? அப்படியென்றால் (ராமனை இடைவிடாமல் தியானிக்கும்) நான் ராமனாக மாறி விடுவேன்.எனது அன்புக்குரிய கணவரின் அன்பு இல்லாமல் தள்ளி தூர இருப்பதிலிருந்து விடுபட்டு விடுவேன்” என்றாள்இதைக் கேட்ட த்ரிஜடை உடனே சீதையை நோக்கிப் பதில் கூறுகிறாள் : “ அப்படி என்றால் அது நல்லதற்குத் தான்! ஏனெனில் நீங்கள் ராமர் ஆகி விடுவீர்கள். உங்களை இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்கும் ராமர் சீதை ஆகி விடுவார்!
நீங்கள் (ராமராக ஆகி விடுவதால்) எதிரியான ராவணனைக் கொன்று விடுவீர்கள். உடனே ராமருக்கு அருகில் சென்று விடுவீர்கள். (அவரவர் தம் தம் உருவை எடுத்துக் கொள்வீர்கள்!)
எப்படிப்பட்ட அபாரமான கற்பனை! 
-------  (Courtesy swamiindology..blogspot) 
कीटोऽयं भ्रमरी भवेदविरतध्यानात्तथा चेदहं
रामः स्यां , त्रिजटे , तथा ह्यनुचितं दाम्पत्यसौख्यच्युतः |
एवं चेत्कृतकृत्यतैव भविता ; रामस्तव ध्यानतः

सीता ; त्वं च निहत्य राक्षसपतिं सीतान्तिकं यास्यसि ||
----------------------------------------------------------------------------------
LEAP, was presented in English, as 'Ram-Lila', an improvised folk version of the ancient theatrical tradition of enacting the great epic in front of tens of thousands of devotees for extended period of time - as practiced & presented in India for nearly four centuries; this version includes dramatized adaptations of Saint Valmiki's Ramayana and Saint Tulsidas' Ram-Carit-Manas. This special production incorporated dance (Bharata nAtyam and other) forms as part of the episodic story line. Original music score is based on verses sung in operatic style by a live orchestra from Valmiki Ramayana and Tulsidas' Ram Carit Manas. The original score draws from both Karnatic and Hindusthani music traditions. This unusual operatic production features a distinctive, separate track that maps some of the events in the epic to psycho-spiritual constructs within each of us. This form of play was conceived, and scripted by Dr. KG Parameswaran who has also directed the opera. Apart from writing some special songs and composing music in scores of Indian Ragas, Priya Krishnan Parameswaran has directed the Music and is the lead vocalist. Subhapriya Krishnan Srivatsan has co-directed the Music and managed the Production. Lavanya Raman has acted, contributed to production design and also sang along with Karthik Gopalaratnam, another well known singer. The eighteen member cast included some well known professional actors from the United states and the nine member team of musicians included some of the well known professional artists from the Bay area.
This short clip is from a scene that portrays the agony, angst and dreams of TrijaTa, the noble daughter of the noble prince VibhIshaNa and the concerns of Sita in captivity. TrijaTa is portrayed by the 12-year old actor/singer Kaanchana Parameswaran and Sita was portrayed by Chinmayi Bettadapur, a well known dancer and a coporate executive from the SF bay area.

Monday, December 4, 2017

THIRUPULI AZHWAR - திருப்புளியாழ்வார்

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
பாரோர் அறியப் பகர்கின்றேன் - சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் - எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்
உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் - உண்டோ
திருவாய்மொழிக்கொப்பு தெங்குருகைக்கு உண்டோ
ஒருபார் தனில் ஒக்கும் ஊர்.
-- உபதேச ரத்தினமாலை மணவாள மாமுனிகள்
---------------------------------------------------------------------------------
முன் உரைத்த திருவிருத்தம் நூறு பாட்டும்
முறையில் வரும் ஆசிரியரும் ஏழு பாட்டும் 
மன்னிய நற்பொருள் பெரிய திருவந்தாதி 
மறவாதபடி எண்பத்தெழு பாட்டும்
பின் உரைத்ததோர் திருவாய்மொழி எப்போதும்
பிழையற ஆயிரத்தொரு நூற்றிரண்டு பாட்டும்
இந்நிலத்தைல் வைகாசி விசாகம் தன்னில்
எழில் குருகை வருமாறா இரங்கு நீயே
---  ஸ்ரீ தேசிக ப்ரபந்த சாரம்
---------------------------------------------------------------------------------------
ஆழ்வார்திருநகரி என்ற தலம் 108 திவ்ய தேசத்தில் ஒன்றாகும்.
திருநெல்வேலி அருகே இருக்கும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற நம்மாழ்வார் அவதரித்த இத்தலம், தாமிரபரணிக் கரையில் நதிக்கரையில் இருக்கும் நவதிருப்பதிகளில் ஒன்றாக, வியாழனுக்குரிய தலமாக உள்ளது.
மூலவர் ஆதிநாதர். கிழக்குப் பார்த்து நின்ற திருக்கோலம். ஆதியிலே தோன்றியவர்  என்பதால் இத்திருநாமம். முதன்முதலாகப் பெருமாள் வாசம் செய்த தலம் என்பதால் ஆதிக்ஷேத்திரம் ஆயிற்று.
இத்தலம் வராக க்ஷேத்திரமும் ஆகும். ஞானப்பிரான் சன்னிதி முதல் பிரகாரத்தில் உள்ளது. ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி என்று இரு தாயார்கள் தனித் தனியான சன்னிதிகளில் பெருமாள் சன்னிதியின் இருபுறங்களிலும் குடியிருக்கிறார்கள். அருகில் உள்ள நவதிருப்பதித் தலங்களிலும் அந்தந்த ஊர்ப் பெயர் கொண்ட நாச்சியார்கள் இருக்கிறார்கள்.
கருடன் இங்கு வழக்கமான கூப்பிய நிலையில் இல்லாமல் பயஹஸ்தம், நாகர், சங்கு, சக்கரத்துடன் இருக்கிறார்.
நகரின் பழைய பெயர் திருக்குருகூர். நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில் பல இறுதிப் பாசுரங்களில் ‘குறுகூர்ச் சடகோபன்’ என்றே தன் பெயரைக் குறிப்பிடுகிறார்.
இராமாவதாரம் முடிவுக்கு வரும் தருவாயில் யமதர்மன் இராமனுடன் பேச வந்தார். அப்பொழுது இராமன் இலக்குவனிடம் யார் வந்தாலும் உள்ளே விடக் கூடாது என்ற கட்டளை இட்டுச் சென்றார். அப்பொழுது மகா கோபியான துர்வாசர் வந்து இராமனைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். தடுத்தும் கேட்கவில்லை. நாட்டு மக்களை சபித்து விடுவேன் என்று கூறியதால், தனக்கு இதனால் எத்துன்பம் வரினும் பரவாயில்லை என்று இலக்குவன் உள்ளே சென்று துர்வாசர் வந்த செய்தியைச் சொல்கிறார். அதனால் இலக்குவன் மரமாக வேண்டிய சாபம் ஏற்படுகிறது. ஆனால், இராமன் இலக்குவன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில்  செய்த அந்த செயலைப் புரிந்து கொண்டு, நான் கலியுகத்தில் ஆழ்வாராக அவதரிக்க உள்ளேன்நீ இந்தக் கணையாழியோடு தென் திசை செல், எங்கு இந்தக் கணையாழி கீழே விழுகிறதோ அங்கு புளியமரமாய் நில் என்று கூறுகிறார்.
அந்த இலக்குவன் புளிய மரமாய் நின்ற இடத்தில் தான் மாறன் தான் இருப்பிடமாக்கிக் கொண்டார். பெருமாள் எங்கு சென்றாலும் இணை பிரியாது தொடர்ந்து வரும் ஆதிசேடனே மரமாகி அதில் பதினாறு வருடங்கள் பெருமாள் மௌனியாக சின் முத்திரையோடு அமர்ந்திருந்தார். அந்தப் புளியமரம் இன்றும் உள்ளது.
திருமால் பிரம்மனுக்குக் குருவாக வந்ததால் திருக்குருகூர் என்ற பெயர் பெற்றது. இத்தலத்தின் இன்னொரு சிறப்பு திருப்புளியாழ்வார் என்றும், உறங்காப்புளி என்றும் அழைக்கப்படும் புளிய மரமாகும். இம்மரம் 5,000 ஆண்டு பழமையானது என்று கூறப்படுகிறது. இதன் இலைகள் மற்ற புளிய மர இலைகளைப் போல் இரவில் மூடாது. இம்மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் பழுக்காது.
ஆகவே கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், இளையாழ்வார் என்பதைப் போல் ‘திருப்புளியாழ்வார்’ என்று வைணவ மக்களால் இந்தப் புளிய மரம் கொண்டாடப் படுகிறது.

ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் வரை அதற்கு முற்பிறவி நினைவு இருக்குமாம். பூமியில் பிறந்தவுடன் சடம் என்னும் வாயு குழந்தையை சூழ்ந்து கொள்வதால் பூர்வ பிறவியின் வாசனை அற்றுப் போய் மாயையினால் கவரப்பட்டோமே என்று அழுமாம். ஆனால் நமாழ்வார் பிறந்தவுடன் அவரை சடம் என்னும் வாயுவால் நெருங்க முடியவில்லை. அதனால் தான் அவர் பிறந்தவுடன் அழவில்லை. சடம் என்னும் வாயுவை முறித்ததினால் அவருக்கு சடகோபன் என்னும் பெயரும் உண்டாயிற்று.

நம்மாழ்வார் பிறந்தவுடன் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தார். அவருடைய பெற்றோர் இத்தலத்துக்கு வந்து இறைவன் முன் அவரைத் தரையில் இட்டனர். உடனே அக்குழந்தை தவழ்ந்து சென்று அருகில் இருந்த இப்புளிய மரத்தின் பொந்தில் சென்று தியானத்தில் ஆழ்ந்தது.
16 ஆண்டுகளுக்குப் பின், அருகில் உள்ள திருக்கோளூரைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் வடதிசை சென்றபோது, தென்திசையில் தெரிந்த தெய்வீக ஒளியைப் பின்பற்றி வந்து நம்மாழ்வாரை அடைந்தார்.

புளியமரப் பொந்திலிருந்த பாலகனைப் பார்த்து அவர், “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எப்படி இருக்கும்?” என்று கேட்டார். அப்பாலகனும் கண் திறந்து, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று கூறினார். அவர் கேட்டது - சடப்பொருளான உடம்பில் உயிர் சேர்ந்தால் என்னவாகும் என்பதாகும். உடம்பையே தானாக நினைத்து அதில் உழன்று கொண்டிருக்கும் என்று நம்மாழ்வார் கூறியவுடன், அந்தப் பண்டிதர் அவரது காலில் விழுந்து, அவரது சீடனாகி, அவரை மட்டுமே பாடி, மதுரகவி ஆழ்வார் என்ற பெயருடன் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவருமானார்.
தேறிய மாஞானமுடன் திருக்கோளூரில்
சித்திரையில் சித்திரைநாள் வந்து தோன்றி
ஆறிய நல் அன்புடனே குருகூர் நம்பிக்கு 
அனவரதம் அந்தரங்க அடிமை செய்து
மாறனை அல்லால் என்றும் மறந்தும் தேவு
மற்றறியேன் எனும் மதுரகவியே நீ முன்
கூறிய கண்ணிநுண் சிறுத்தாம்பு அதனில் பாட்டுக்
குலவு பதினொன்றும் எனக்கு உதவு நீயே
---  ஸ்ரீ தேசிக ப்ரபந்த சாரம்
---------------------------------------------------------------------------------
ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்து உதித்த
சீராரும் சித்திரையில் சித்திரை நாள் - பாருலகில்
மற்றுமுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும் 
உற்றது எமக்கு என்று நெஞ்சே ஓர்.
- உபதேச ரத்தினமாலை மணவாள மாமுனிகள்
----------------------------------------------------------------------------------------------
வைணவ மரபுப்படி குருவிற்கே ஏற்றம் அதிகம். இறைவனை விட ஆச்சர்யார்களே முதன்மையும் மேன்மையும் உடையவர்கள். இந்த மரபுப் படி திருமாலே முதல் ஆச்சார்யர், திருமகள் இரண்டாம் ஆச்சார்யர், பரமபதத்தில் இருக்கக் கூடிய சேனை முதலியார் மூன்றாம் ஆச்சார்யர். சேனை முதலியாரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வாரை மதுரகவியாழ்வார் தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவருக்குத் தொண்டு புரிவதிலேயே தான் வாழ்நாளைக் கழித்தார். மதுரகவிஆழ்வார் இறைவன் மேல் ஒரு பாசுரம் கூட இயற்றவில்லை. அவர் இயற்றியப் பாசுரங்கள் அனைத்தும் நம்மாழ்வார் மேல் மட்டுமே. இவரன்றி வேறு தெய்வம் இல்லை என்று இவர் மேல் பதினோரு பாக்கள் இயற்றி அதனாலேயே ஆழ்வாரானார். நம்மாழ்வாரின் பாக்களை உலகறியச் செய்தார் மதுரகவியாழ்வார்.
இந்தப் புளியமரத்தின் அடியிலேயே நம்மாழ்வாருக்கு 36 திவ்ய தேசத்துப் பெருமாள்களும் வந்து காட்சி அளித்ததாகவும், இங்கிருந்தே அவர்களைப் பாடியதாகவும் கூறப் படுகிறது.
புளிய மரத்தின் அடியில் கட்டப்பட்டிருக்கும் சுவரின் நான்கு பக்கங்களிலும் 36 திவ்ய தேசப் பெருமாள்களின் சிற்பங்கள் உள்ளன. 


Thursday, November 30, 2017

VRUCHCHIGA MAASA - NARASIMHA MAHATMIYUM (கார்த்திகை மாதத்தில் லக்ஷ்மீ நரசிம்மனைத் துதிப்போம்

Image result for lord lakshminarasimha
கார்த்திகை மாதம் என்றாலே பகவான் நரசிம்மன் என்பர். இந்த மாதத்தில் அவர் கண் திறந்து பக்தர்களை அருளுவதாக ஒரு ஐதீகம். 
பகவான் ஸ்ரீமத்நாராயணன் பக்தனுக்காக கூப்பிட்டவுடன் வந்து அருளிய அவதாரங்களில் சிறந்தது நரசிம்ம அவதாரம். ப்ரஹ்லாதன் கூப்பிட்டு தவறான ஒரு தூணில் ஹிரண்யகசிபு அடித்து உடைத்து விடக்கூடாது என்பதால், அன்று அந்த மாளிகையில் உள்ள எல்லா தூண்களிலும் நரசிம்மர் ப்ரஹ்லாதனுக்காக அருள தயார் நிலையில் இருந்தாகச் சொல்லுவர். 


ராமன் சீதையைத் தேடிச் செல்லும் பொழுது, அஹோபிலம் வழியாகச் சென்று நரசிம்மனை வழிபட்டதாகச் சொல்வர். அதனால் உலகிற்கு கிடைத்தது நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்திரம். க்ருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரனுக்கு வனவாசத்தின் போது, அஹோபில நரசிம்மனின் மஹத்வத்தைச் சொல்லும் பொழுது, இந்த ஸ்தோத்திரத்தை உலகுக்கு அருளினார்.
இன்று எங்களது தகப்பனார் ஸ்ரீனிவாச ராகவனின் ஆராதனை நாள். அவர் எல்லா மூர்த்திகளையும், வைணவ சைவ பத்ததிகளையும் ஆராதித்தவர். நாம சங்கீர்த்தனத்தில் இச்சையுடையவர்கள், அதன் மூலம் பகவானை அடையும் சுலப வழியாக நினைப்பவர்கள், மூன்று சித்தாந்தங்களான த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத வழிபாட்டு மூர்த்திகளையும் ஆராதிப்பர். எங்களது தகப்பனார் அதன் வழியாக எல்லா ஆராதன மூர்த்திகளையும் ஆராதித்த பாடல்களின் தொகுப்பை, மாலையாக தொடுத்து அர்ப்பணித்தார்.  
ஆதிசேஷய்யருடன் சேர்ந்து முருகனை நினைந்து உருகி பல பாடல்களை இயற்றினார். ஆண்டவன் பிச்சையுடன் ஆறுபடை யாத்திரையில் கிடைத்த ஒரு தொடர்பால் அம்பிகை, ஈஸ்வரன் வழிபாட்டில் திளைத்து பல பாடல்களை தந்தார். நாராயண பட்டத்ரியின் நாராயணீயத்தை தினமும் பாராயணம் செய்து, அதன் தமிழாக்கத்தை பாடல்களாக அளித்தார்.
திருவல்லிக்கேணி தெற்கு மாடவீதி ராகவாச்சாரி அவர்களின் பஜனையில் கலந்து கொண்டு, திருவல்லிக்கேணி யோக நரசிம்மரை மையமாகக் கொண்டு, சன்னதியிலே எங்களது தந்தை "ராகஸ்ரீ" என்ற ஸ்ரீநிவாசராகவனால் இயற்றப் பட்ட இந்தப் பாடல், எனது தமக்கை ஸ்ரீமதி பூமா, எனது தமயனார் திரு க்ருஷ்ணன் இருவரால் சேர்ந்து 1956ல் மார்கழி மாதத்தில் யோக நரசிம்மர் சன்னதியில் அரங்கேற்றப்பட்டது.


Monday, November 20, 2017

Sundarakandam


सुंदरे सुंदरो रामो सुंदरे सुंदर: कपि: |

सुंदरे सुंदरी सीता सुंदरे किं न सुंदरम् ||
------------------------------------------------
சுந்தர காண்டத்தில் சீதையை தேடும் பொருட்டு பரத கண்டத்தின் தெற்கு பக்கம் அங்கதன் தலைமையில் சென்ற வானரக் கூட்டம், மகேந்திரகிரி மலையில் தங்கியிருக்கையில், அங்கிருந்த வயது முதிர்ந்த கழுகரசன் சம்பாதியின் அறிவுரையின் படி, அனுமான் வானில் பறந்து, கடலைக் கடந்து இலங்கை சென்றான்.
இலங்கையின் அசோகவனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை, அனுமார் சிறு குரங்கு வடிவில் சந்தித்து, இராமரின் கணையாழி மோதிரத்தை சீதையிடம் கொடுத்து, தன்னை இராமதூதன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். சீதையும் தனது நெற்றிச் சூடாமணி நகையை, அனுமாரிடம் கொடுத்து, இராமர் ஒரு மாதத்திற்குள் இராவணன் மீது போர் தொடுத்து தன்னை விடுவிக்க வேண்டிக் கொள்கிறாள்.
பின்னர் அரக்கர்களிடம் வேண்டுமென்று சிக்கிக் கொண்ட அனுமாரின் வாலில் தீ வைக்கப்பட்டது. அனுமரும் வாலில் வைக்கப்பட்ட தீயுடன் இலங்கை நகரைச் சுற்றி வந்து, நகரின் பெரும்பாலான பகுதிகளை எரித்தார். பின்னர் அனுமாரைப் பிடிக்க வந்த சம்புமாலி , பஞ்ச சேனாபதிகள் , மற்றும் இராவணன் மகன் அட்சயகுமாரன் ஆகியோர் அனுமரால் கொல்லப்பட்டனர். பின்னர் கண்டேன் சீதையை எனக் கூறிய படி, இராமரிடம் சீதை கொடுத்த சூடாமணியை அனுமார் கொடுத்ததுடன், சீதையின் செய்தியையும் கூறினார்.

சுந்தர காண்டத்தை பாராயணம் செய்வது மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் அல்லது கேட்டால் உரிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

Wednesday, November 8, 2017

Ramanamame Jeevanamu

ராம நாம மந்திரத்தின் ஏற்றத்தை உலகுக்கு தெரியச் செய்த நாரதரின் கலகத்தை நாம் எல்லோரும் அறிவோம். காசி மன்னனை பகடைக்காயாக ஆக்கி, ராம ஹனுமானின் போரைத் துவக்கி, ராம நாம ஸித்தாந்தை உலகு அறியச் செய்தார் அன்று.
பாபனாசம் சிவனின் க்ருதியை நாம் மனமுருகப் பாடினால் ஜகத்குரு பகவன்நாம போதேந்திர ஸ்வாமிகளின் காலத்தில் நடந்த சில நிகழ்வுகள் நம் கண்முன் ஒளிக்கும்.
ராம நாம அம்ருத பானமே நாவுடையோர் உயர் ஜீவனமே
உரைக்க உரைக்க உடல் எல்லாம் இனிக்குமே
ஊமையல்லாவதர்க்கும் எளிது -ஸ்ரீ
(ஊமையை உரைக்கவைத்த ராம நாம் என்று எழுதியிருந்தால் அது மிகையாகாது. போதேந்திர ஸ்வாமிகளின் சீடரிலிருந்து அறியலாம்.)
எட்டு எழுத்திற்கும் உயர் ஐந்தெழுத்திற்கும் – இவ
இரண்டெழுத்தே உயிராகும் -இத்
தாரக மந்திரம் ஈசன் காசிபதியில்
உபதேசம் செய்த வைபவம் கொண்ட அதிமதுர

                        19ம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு புத்தகத்தின் நகலை இங்கே தந்துள்ளேன். “திருநெய்தானம் நரசிம்ம பாகவதரால்” தொகுக்கப்பட்ட இந்த புத்தகம், காகிதத் துகள்களிருந்து புனருத்தாருணம் செய்யப்பட்டது.


போதேந்திர சரஸ்வதி (Bodhendra Saraswathi, 1610-1692) தமிழ்நாடு மாநிலத்தின், காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் 60வது பீடாதிபதியாவர். 17வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கோவிந்தபுரத்தில் விதேகமுக்தி அடைந்தவர். சதாசிவ பிரமேந்திரர் மற்றும் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியோர்களின் சமகாலத்தவர்.
போதேந்திர சரசுவதி, கேசவபாண்டுரங்க யோகி - சுகுணா இணையருக்கு 1610இல் காஞ்சிபுரத்தில் புருசோத்தமன் எனும் இயற்பெயருடன் பிறந்தவர். காஞ்சி சங்கர மடத்தின் 59வது மடாதிபதியான விஸ்வகேந்திர சரசுவதி சுவாமிகள், மெய்யறிவு நிரம்பிய புருசோத்தமனின் திறமையைப் பாராட்டி, சங்கரமடத்தின் இளைய மடாதிபதியாக, போதேந்திர சரசுவதி என்ற புதிய பெயர் சூட்டி நியமித்தார். ஆத்மபோதர் எனும் குருவால் பயிற்றுவிக்கப்பட்ட போதேந்திர சரசுவதி சுவாமிகள், இளம் வயதிலே சுருதி மற்றும் ஸ்மிருதி ஆகிய இந்து சமய வேத சாத்திரங்களில் தேர்ச்சி பெற்றார். நாள்தோறும் ஒரு இலட்சம் இராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருப்பர்.
போதேந்திர சரசுவதி சுவாமிகள், தனது முதுமைக் காலத்தில் காவேரி ஆற்றாங்கரையில் அமைந்த தஞ்சாவூர் பகுதியின் கோவிந்தபுரம் எனும் கிராமத்தில் வாழ்ந்தார். இக்கிராமத்திலேயே சமாதி அடைய முடிவெடுத்தார்.1692ஆம் ஆண்டு புராட்டாசி மாதம் போதேந்திர சரசுவதி சுவாமிகள் யோக நிலையில் அமர்ந்து சீவசமாதியில் இருந்தார்.1962ஆம் ஆண்டில் முழு நிலவு நாளான்று விதேக முக்தி அடைந்தார். போதேந்திர சரசுவதி சுவாமிகளின் சமாதியை காஞ்சி சங்கர மடத்தினர் பராமரிக்கிறார்கள்.
(கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது)
ஸ்ரீ காமகோடி பீடாதிபர்களான விஸ்வாதிகேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் திரு.புருஷோத்தமனை போதேந்திர ஸரஸ்வதியென்று பெயரிட்டு மடத்திற்கு 60வது இளவரசாக்கி மந்திர உபதேசம் செய்தார். அவரது சொல்படி லக்ஷ்மீதரக்கவியின் “ஸ்ரீபகவந்நாம கௌமுதி” என்ற அறிய க்ரந்தத்தை இவ்வுலகிற்கு அளித்த அந்த வ்ருத்தாந்தத்தை நாம் அறியலாம். காசியாத்திரைக்குச் சென்ற ஒரு ப்ராமண தம்பதி, ஒரு ம்லேச்சனிடம் தனது மனைவியை பறிகொடுத்து, பின்பு லக்ஷ்மீதரக்கவியின் மகன் சொல்படி, ராம நாமத்தை உரைத்து மனைவியையும் அதனால உயர்ந்த பதவியையும் பெற்ற அந்த தம்பதியை கண்ட போதேந்திர ஸ்வாமிகள், ஒரே இரவில் “ஸ்ரீபகவந்நாம கௌமுதி” க்ரந்தத்தை படித்து மனதில் வாங்கிக் கொண்டு, அந்த நூலை நமக்கு அளித்துள்ளார். ஊமையை ராம நாமத்தின் மூலமாக பேசவைத்த போதேந்திர ஸ்வாமிகளின் அறிய செயலை நாம் அறியாலாம். மூன்று முறை உறைக்கச் சொன்ன மகனிடம், லக்ஷ்மீதரக்கவியின் மனைவி, ராம நாமத்தை ஒரு தரம் உறைத்தாலே உன்னத பதவியை அடையாலாம் என்றார்.
Click here to view the book / download Bagwan Nama Kaumudhi
அப்படிப்பட்ட அந்த ராம த்யானத்தை பத்ராசல ராமதாஸர் எவ்வாறு அனுபவித்தார் என்பதை உங்களுடன் பாடி மகிழ்கிறேன்.