Friday, July 25, 2014

Varkari Movement

பாரத தேசத்தில் கார்நாடக மாநிலம் மகாராஷ்டிரா மாநிலம் இரண்டும் சேர்ந்து கன்னட தேசமாக 10, 11வது நூற்றாண்டில் இருந்தபோது, பாகவத தர்மத்தில் பக்தியை கற்பிக்கும் ஒரு உன்னதமான ஒரு பள்ளிகூடமாக "வர்காரி" திகழ்ந்தது. பண்டர்பூரில் மிளிர்ந்த இந்தப்  பள்ளிக்கூடத்தில் விட்டலரும் விட்டோபாவும் பலரை ஈர்த்தனர்.
மராத்திய மொழியில் "வரி" என்றால் கடவுள் குடிகொண்ட புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் தீர்த்த யாத்திரையைக்  குறிக்கும். இந்த தர்மத்தைப்  பின்பற்றுவோரை "வர்காரி" என்பர். இந்த தர்மத்தை அனுஷ்டிப்பவர்கள், ஒவ்வொரு ஏகாதசியன்று  பண்டர்பூருக்குச் செல்வர். கார்த்திகை மாதத்தில் வரும் ஏகாதசி மிகவும் முக்கிய தினமாகும். 
ஞானேஸ்வர், நாமதேவர், துக்காராம் மேலும் சோகாமேளா என்பர்கள் இந்த தர்மத்தை அனுஷ்டிப்பவர்களில் மிகவும் முக்கியமானவர்கள்.
வர்காரி என்பதைப் பற்றிய ஒரு சங்கீத உபன்யாசத்தை திரு.பரமேஷ் கோபி அவர்கள் மிக திறம்பட அளித்துள்ளார். கேட்டு மகிழ்ந்து அவரை நாமும் ஊக்குவிக்கலாம்.



Part 3    Part 4   Part 5   Part 6   Part 7   Part 8   Part 9

No comments:

Post a Comment