Thursday, July 31, 2014

Guru Vandhanam


எங்களது குருநாதர் இந்த அபங்கத்தை அடிக்கடி பாடுவார். ஏனென்றால் குரு வந்தனத்தின் மேன்மையை மிகவும் அழகாகக் கூறும் அபங்கமாகும்.


கோபீ பாவத்தில் இருந்து கொண்டு பரமாத்மாவை தன் வசமாக்கு. யார் என்ன சொன்னாலும் கேட்காதே. பரமாத்மாவை கெட்டியாய்ப் பிடித்து முடிச்சு போடு. புகழ்ச்சி இகழ்ச்சிகளை கோல் கொண்டு விரட்டு. தேஹ பாவத்தைக் களை. எதையும் எதிர்பாராது பொருளின் மீது ஆசைப்படாமல் அபேக்ஷையின்றி துதி. குதர்க்கவாதங்களை விட்டு விடு. உனக்கு மூப்பு வந்தால் ஒன்றும் முடியாது. ஆகையால் இந்த யுகத்தில் உனக்குக் கிடைத்த இந்த நர ஜென்மத்தில் தாமதமின்றி குருவை அணுகு. அவரே உனக்கு உண்மையானவர். அவரை விட்டால் வேறு கதியில்லை.

No comments:

Post a Comment