Tuesday, November 19, 2013

KISALAYA SAYANA - 23- ASHTAPATHI

गतवति सखीवृन्देऽमन्दत्रपाभरनिर्भर-
स्मरशरवशाकूतस्फीतस्मितस्नपिताधराम्।
सरसमनसं दृष्ट्वा राधां मुहुर्नवपल्लव-
प्रसवशयने निक्षिप्ताक्षीमुवाच हरिः प्रियाम् ॥१॥


ஆதார ஸ்ருதிக்கு யாழினை அன்றைய நாட்களில் கையாண்டனர் என்பதை சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நூலகளிலிருந்து நாம் அறியலாம்..
மாயாமளவகௌளம், கல்யாணி, சங்கராபரணம் என்ற மூன்றும் ப்ரும்மா, விஷ்ணு, சிவன் போன்று எல்லா சங்கீத அமைப்புகளிலும் உள்ளது. அன்றைய காலகட்டத்தில் யாழின் ஒலியினை ஆதாரஸ்ருதியாகக் கொண்டு பாடினர். அவரவர் குரலுக்குத் தகுந்தாற்போல் யாழின் நரம்புகளை கூட்டியோ குறைத்தோ பாடிவந்தனர். 440HZ என்ற ஒழி அளவினை ஆதாரமாக வைத்து அமைக்கப்பட்ட சுருதி பிற்காலத்தில் தான் வந்தது. யாழின் சுருதியைக் கூட்டிப் பாடும் பொழுது சில சமயங்களில் மேல் ஷட்ஜமத்தை இசைக்கமுடியாமல் பாடி உருவாகியியுள்ளதோ என்ற கருத்து ஒன்று உள்ளது. நிஷாதாந்திய ராகங்கள் அவ்வாறு வந்ததாக ஒரு கருத்து. நாதநாமக்ரியாவும், சித்தஞ்சனியும் இந்த வகையில் உள்ள ராகங்கள். நாதநாமக்ரியா மாயாமளவ ராகத்தில் ஜன்யமாக அமைந்த்துள்ளது. 
இந்த அற்புத ராகம் ஒரு தெய்வீகமான மதுரமான மயக்கத்தைத் தரும் ராகம் என்பதால் இந்த அஷ்டபதியினை இந்த ராகத்தில் அமைத்துள்ளனர். பிரிந்த கிருஷ்ணனும் ராதையும் சேர்ந்தவுடன் எவ்வாறு அவர்கள் மன நெருக்கத்தை அனுபவித்தார்கள் என்பதே இந்த அஷ்டபதியின் உட்கருத்து.

No comments:

Post a Comment