Tuesday, August 20, 2013

SAHASRA LINGAM

சிவ லிங்கங்களைப் பற்றிய தொகுப்பினை வலையில் படித்த போது, அருமையான பக்திக் கதை ஒன்றினைப் படித்தேன். எந்தப் பொருளினால் சிவலிங்கத்தை வடிதுள்ளார்களோ, அதனை வைத்து அந்த சிவலிங்கத்தினை அழைப்பர். தங்கம், மண், உலோகங்கள், வெண்ணை, மாவு, ஸ்படிகம் என்ற பொருள்களால் அமைந்திருந்தால், அதனைக் கொண்டு அந்த சிவ லிங்கத்தை வகைப்படுத்துவர். அவ்வாறாக 32 சிவ லிங்கங்கள் வழக்கத்தில் உள்ளன.
கந்த லிங்கம், புஷ்ப லிங்கம், கோசக்ரு லிங்கம், வலுக லிங்கம், யவகோதுமஸலிஜ லிங்கம், சிதகண்ட லிங்கம், லவண லிங்கம், திலபிஷ்ட லிங்கம், பம்ஸ லிங்கம், கூடலிங்கம், வம்சங்குர லிங்கம், பிஸ்த லிங்கம், தடிதுக்த லிங்கம், தான்ய லிங்கம், பாளலிங்கம், தாத்ரி லிங்கம், நவநீத லிங்கம், துர்வகடஜ லிங்கம், கற்பூர லிங்கம், அயஸ்கந்த லிங்கம், மௌக்டிக லிங்கம், ஸ்வர்ண லிங்கம், ரஜித லிங்கம், கம்ஸ்ய லிங்கம், த்ரபு லிங்கம், ஆயஸ லிங்கம், ஸீஸ லிங்கம், அஷ்டத்டு லிங்கம், அஷ்டலோக லிங்கம், வைடுர்ய லிங்கம், ஸ்படிக லிங்கம், பதர லிங்கம்.
ஒரு பெரிய லிங்கத்திற்குள் 999 லிங்கள் செதுக்கப்பட்டு அதனை பூஜித்தால், அதனை ஸஹஸ்ர லிங்கம் என்று அழைப்பர். இந்த லிங்கம் தோன்றிய விதத்தை லிங்கபுராண தொகுப்பினிலிருந்து அறிந்தேன்.
ராவணன், அவனது மனைவி மண்டோதரி இருவருமே சிவ பக்தர்கள்.  சிவபூஜையின் போது எப்பொழுதுமே புலித்தோல், சர்ப்பங்கள் என்பவைகளை அணிந்தே பார்த்து களைத்த மண்டோதரி சர்வ அலங்காரத்துடன் இருந்தால் எவ்வாறாக இருக்கும் என்று எண்ணினாள்.
ஒரு சமயம் உத்தரகோசமங்கை என்னும் க்ஷேத்திரத்தில் குருவாக அமர்ந்து ஆயிரம் முனிவர்களுக்கு  ஆகம விதிகளை (கோயில் பூஜை விதிமுறைகளை) கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவளது வேண்டுதலை அறிந்து சர்வ அலங்காரத்துடன் காட்சி தர எண்ணினார். முனிவர்களிடம் தனது விருப்பத்தைச் சொன்னார். தான் திரும்பிவரும் வரை ஆகம சுவடிகளை பாதுகாக்க அந்த 1000 முனிவர்களிடமும் பொறுப்பை ஒப்படைத்தார். முனிவர்கள் அவர் செல்வதை விரும்பவில்லை. ராவணன் ஒரு கொடிய அரக்கன். சாகாவரம் பெற்றவன். மானிடனால் மட்டுமே அழிக்கும் வரத்தை ப்ரும்மாவிடம் பெற்றிருந்ததால் சிவபெருமான் அங்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை. பிறப்பும் அழிவும் இல்லாத சிவன் அவர்களை அஞ்ச வேண்டாம். ராவணனும் சிவ பக்தன் தான் என்றார்.
ஒருவேளை தீங்கு ஏற்பட்டால், ஆதி கங்கையில் தீப்பிழம்பு தோன்றும். அப்பொழுது உரியதைச் செய்யுங்கள் என்று பணித்துச் சென்றார்.
மாயா என்ற யக்ஷனுக்கும் ஹேமா என்ற கந்தர்வ மங்கைக்கும் காட்டினிலே பிறந்த அதிசயக் குழந்தை மண்டோதரி ஆவாள். குழந்தை பிறந்தவுடன், யக்ஷன் யக்ஷலோகத்திற்குச் தாயையும் சேயையும் விட்டுப் பிரிந்து திரும்பிச் சென்றான். பிறந்த சிலநாட்களிலேயே பருவ வயதினை அடைந்த இந்த அதிசய யுவதியை மணக்க ஆசைப்பட்டு தாயின் சம்மதத்தைப் பெற்று காந்தர்வ முறையில் ராவணன் மணந்த யுவதியே மண்டோதரி ஆவாள்.
மண்டோதரி சிவபூஜை செய்து கொண்டிருந்தபொழுது, சிவபெருமான் அவளது விருப்பப்படி சர்வ அலங்காரத்துடன் ப்ரசன்னமானார். அவருக்குப் பாதபூஜை செய்தாள். அங்கு ராவணன் வருவதை அறிந்த சிவன், ஒரு பச்சிளங்குழந்தையாக மாறினார். குழந்தையின் பேரழகைக் கண்ட ராவணன், அந்தக் குழந்தையை எடுத்து மார்புடன் தழுவி மகிழ்ந்தான். அந்தக் குழந்தையைப் பற்றி வினவ அது ஒரு ரிஷிபத்தினியின் மகவு என்று உறைத்தாள். 
அப்போது லோகமாதா பார்வதி தேவி, ரிஷி பத்தினியாக வந்து குழந்தயை வாங்கிச் சென்றாள். ராவணன் குழந்தையைக் கையில் எடுத்ததுமே ஆதிகங்கை பொய்கையில் தீப்பிழம்பு தோன்றிற்று. சிவபெருமானுக்கு ஆபத்து என்று நினைத்து ஒருவர் பின் ஒருவராக தீயில் வரிசையாக முனிவர்கள் பாய்ந்தனர்.
ஒரே ஒரு முனிவர் மாத்திரம் சிவனின் கட்டளைக்கு அடிபணிந்து ஆகம சுவடிகளுடன் சிவனுக்காக காத்திருந்தார். அப்போது அங்கே சிவன் தோன்றி மாண்ட முனிவர்களை உயிருடன் எழுப்பி அவர்கள் 999 பேருடன், தாமும் ஒரு லிங்கமாக மாறி ஸஹஸ்ரலிங்கம் என பெயர் பெறுவதாகச் சொன்னார்.
வாக்கு தவறாமல் ஆகமங்களைப் பாதுகாத்த முனிவரை அடுத்த பிறவியில் பாண்டிய நாட்டில் மாணிக்க வாசகராய் பிறப்பித்து, தன் அடி வர சிவன் அருளியதாக சிவ புராணத்தில் உள்ளது.
அதன் காரணமாக திருவாசகம் என்னும் அறிய நூல் நமக்குக் கிடைத்தது

Monday, August 19, 2013

RUK - YAJUR UPAKARMA - 20.08.2013 - AVANI AVITTAM


ருக் யஜுர் உபாகர்மா ( செவ்வாய்க் கிழமை 20-08-2013)
ஆவணி அவிட்டம்
1. யக்ஞோபவீத தாரணம்
2. காமோகார்ஷீத் ஜப ஸங்கல்பம்
3. காண்டரிஷி தர்ப்பணம்
4. அத்யயன ஹோமமும் 
5.வேத ஆரம்பம்
காயத்ரீ ஜபம் (புதன் கிழமை 21-08-2013)
1. ஸ்ங்கல்பம்

2. 108 / 1008 காயத்ரி ஜபம்

Saturday, August 17, 2013

MISSING

One of my email pal has sent a forward. 
It is really thought provoking.
I need not detail it with description, what I read.
This photo itself will explain
what are we missing.
Is it things mentioned above or our happy life?
Or Both

Thursday, August 15, 2013

Thiruppaavai - 23 - Maarimalai muzhanjil

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்*
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து*
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி*
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்*
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா* உன்-
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் *கோப்புடைய-
சீரிய சிங்காசனத்து இருந்து *யாம் வந்த-
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

SRI RAMA HRUDAYA SLOKAM

ஸ்ரீராமஹ்ருதயம்

ததோ ராம: ஸ்வயம் ப்ராஹ ஹனூமந்த முபஸ்திதம்
ஸ்ருணு தத்வம் ப்ரவக்ஷ்யாமி ஹ்யாத்மாநாத்மபராத்மநாம்
ஆகாஸஸ்ய யதா பேதஸ்த்ரிவிதோ த்ருஸ்யதே மஹாத் (1)
ஜலாஸயே மஹாகாஸ்ஸ்ததவச்சிந்ந ஏவ ஹி
ப்ரதிபிம்பாக்யமபரம் த்ருஸ்யதே த்ரிவிதம் நப: (2)
புத்த்யவச்சிந்நசைதந்ய மேகம் பூர்ணமதாபரம்
ஆபாஸ்ஸ்த்வபரம் பிம்ப்பூதமேவம் த்ரிதா சிதி: (3)
ஸாபாஸபுத்தே க்ர்த்ருத்வம் அவிச்சிந்நே அவிகாரிணி
ஸாக்ஷிண்யாரோப்யதே ப்ராந்த்யா ஜீவத்வம் ச த்தாஅபுதை (4)
ஆபாஸஸ்து ம்ருஷா புத்திரவித்யாகார்யமுச்யதே
அவிச்சிந்நம் து தத்ப்ரஹ்ம விச்சேதஸ்து விகல்பத: (5)
அவிச்சிந்நஸ்ய பூர்ணேந ஏகத்வம் ப்ரதிபாத்யதே
த்த்வமஸ்யாதிவாக்யைஸ்ச ஸாபாஸஸ்யாஹமஸ்த்தா (6)
ஐக்யஜ்ஞாநம் யதோத்பநநம் மஹாவாக்யேந சாத்மநோ:
த்தாஅவித்யா ஸ்வகார்யைஸ்ச நஸ்யத்யேவ ந ஸம்ஸய: (7)
ஏதத்விஜ்ஞாய மத்பக்தோ மத்பாவாயோப்பத்யதே
மத்பக்திவிமுகாநாம் ஹி ஸாஸ்த்ரகர்த்தேஷு முஹ்யதாம் (8)
ந ஜ்ஞாநம் நசமோக்ஷ: ஸ்யாத்தேஷாம் ஜந்மஸதைரபி
இதம் ரஹஸ்யம் ஹ்ருதயம் ம்மாத்மநோ
மயைவ ஸாக்ஷாத்கதிதம் தவாநக
மத்பக்திஹீநாய ஸடாய ந த்வயா
தாதவ்யமைந்த்ராதபி ராஜ்யதோஅதிகம் (9)
இதி ஸ்ரீராமஹ்ருதயம் ஸம்பூர்ணம்

Tiruppavai 22 Anganmaal


அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய் செய்த தாமரைப்பூப் போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ!
திங்களும் ஆதித்யனும் எழுந்தார்ப்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோரெம்பாவாய்.

Tuesday, August 6, 2013

Jagath Janani Siva Sayee Sankari

ஜகது ஜனனீ சிவ ஸாயீ சங்கரி
மாதா மஹேஸ்வரி பார்வதிமா
அபயப்ரதாயினி கான வினோதினி
மாதா பவானி மா ஜயமா
ஜயமா ஜயமா 
காளி  கபாலினி மா ஜயமா

Sunday, August 4, 2013

Avani Avittam - Ruk / Yajur / Sama Upakarma

ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன? இந்த வருடம் என்று வருகிறது. செயல்முறை, அதற்கான் மந்திரம் மற்றய விஷயங்கள் எல்லாம் வலையில் மிகவும் தெளிவாகவும், சுலபமான செயல்முறை விரிவாகவும் உள்ளது.
ஆவணி அவிட்டம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது
1. காயத்ரி மஹாமந்திரம்
2. பூணல்
3. இடுப்பில் கட்டும் முஞ்சிக் கயிறு
4. மான் தோல்
5. பலாச தண்டம்
6. கௌபீன வஸ்த்ரம்
7. பனை மர இலையில் நெய்த சிறிய குடை
8. தண்டம், கமண்டல ஜல பாத்திரம்
9. குசமென்ற தர்பைபில்
10. ருத்ராக்ஷம் அல்லது துளசி மாலை
11. பிக்ஷா பாத்திரம்
12. ஸமித்து

தவஸ்வியான கஸ்யபருக்கும் அத்திதிக்கும் பகவான் நாரயணன் குழந்தையாக அவதரித்து, ப்ரமச்சாரியா உடனே மாறி, மஹாபலியிட யாசகம் கேட்கச் செல்லுகிறார்.
 ஸ்ரீமத் பாகவதத்தில் வாமனரை
தஸ்யோபநீயமானஸ்ய ஸாவித்ரீம் ஸவிதாப்ரவீத்
ப்ரஹஸ்பதிர் ப்ரஹ்மஸூத்ரம் மேகலாம் கஸ்யபோத்தாத்
த்தௌ க்ருஷ்ணாஜினம் பூமி தண்டம் ஸோமோ வனஸ்பதி
கௌபீநாச்சாதனம் மாதா த்யௌச் சத்ரம் ஜகத: பதே:
கமண்டலும் வேதகர்ப: குஸான் ஸப்தர்ஷயோ தது:
அக்ஷமாலாம் மஹாராஜ ஸரஸ்வத்யவ்ய்யாத்மன:
தஸ்மா இத்யுபநீதாய யக்ஷராட்  பாத்ரிகாமதாத்
பிக்ஷாம் பகவதீ ஸாக்ஷாத் உமாதாதம்பிகா ஸதீ
ஸ ப்ரஹ்ம வர்ச்சஸேனைவம் ஸபாம் ஸம்பாவிதோ வடு:
ப்ரம்ஹரிஷி கன ஸஞ்ஜுஷ்டாம் அத்யரோசத மாரிஷ:
ஸமித்தமாஹிதம் வன்ஹீம் க்ருத்வா பரிஸமூஹனம்
பரிஸ்தீர்ய ஸமப்யர்ச்ய ஸமித்பிரஜூஹோத் த்விஜ:

உபநயனம் செய்விக்கபடும் வாமன மூர்த்திக்கு

1.ஸூர்ய பகவான் காயத்ரி மஹாமந்திரத்தை உபதேசம் செய்கிறார்
2.ப்ரஹஸ்பதி பகவான் தவத்தைக் காக்கும் பூணூலை அளிக்கிறார்
3.முஞ்சிகயிற்றை கஸ்யப ரிஷி இடுப்பில் கட்டுகிறார்
4. பூமி தேவி மான் தோலை போர்த்துகிறாள்
5. சந்திரன் பலாச தண்டத்தை வழங்குகிறார்
6. தாயான அதிதி கௌபீன வஸ்திரத்தை கொடுக்கிறாள்
7. மேலுலக தேவதை குடையை அளிக்கிறார்கள்
8. ப்ரம்ம தேவன் கமண்டலு ஜலபாத்திரத்தை அருளுகிறார்
9. ஸப்த ரிஷிகள் குசமென்ற தர்பை பில் தருகிறார்கள்
10. ஸரஸ்வதி தேவீ ருத்ராக்ஷ மாலையை அளிக்கிறாள்
11. குபேரன் பிக்ஷா பாத்திரத்தைக் கொடுக்கிறார்
12. உமாதேவி பிக்ஷை இடுகிறாள்
இப்படிப்பட்ட வாமனன் மஹாபலியிடம் யாசித்தவுடன் அவாமனனாய் உருமாறி மூவுலகையும் அளந்தார் என்பது புராணம்.

ஆழ்வார்கள் வாக்கில் வாமனனும் அவாமனனும் எவ்வாறு அவதரித்துள்ளார் என்ற ஆராய்ச்சி நூலை திரு கி.ந.சந்தானம் என்பவர் தொகுத்து அளித்துள்ளார். பல தமிழ் பண்டிதர்களின் பாராட்டுதலைப் பெற்ற நூலாகும்.  

Who is an Atheist - நாஸ்திகன் யார்?

நாஸ்திகன் என்பவன் யார்?
முன்னும் இருந்தனர்; இப்பொழுதும் இருக்கின்றார்கள்; நாளையும் இருப்பர். அவர்கள் யார்?
1.கடவுள் இல்லை என்பவனா? அல்லது
2.கடவுளை விட நான் உயர்ந்தவன் என்பவனா? அல்லது
3.யாகம் யக்ஞம் தானம் செய்தல் கூடாது என்று கூறி அதைத் தடுப்பவனா?
ஹிரண்யாக்ஷகன், ஹிரண்யகசிபு, ராவணன், கும்பகர்ணன், கம்ஸன், சிசுபாலன் என்ற ஒரு பட்டியல் உள்ளது. கலியிலும் இவ்வகையில் பலர் உள்ளார்கள். இவர்களெல்லாரும் உண்மையில் நாஸ்திகர்கள் அல்ல.
பாகவதத்தில் சொல்லப்படும் வேனன் என்ற அரசனயே நாஸ்திகன் என்று அழைப்பர். தன்னைத் தவிர கடவுள் என்று ஒருவர் கிடையாது. யாகம் யக்ஞம் என்ற கர்மாக்களால் என்னையே ஆராதிக்க வேண்டும் என்றான். அதானால் அவனை நாஸ்திகன் என்றுவகைப் படுத்தினர். நம்மில் சில வேனர்கள் இருந்து அழிந்தனர்; அவர்கள் பல வேனர்களை உருவாக்கி உள்ளார்கள். ஆனால் உருவாக்கிய வேனர்கள் ஹிரண்யாக்ஷகன், ஹிரண்யகசிபு, ராவணன், கும்பகர்ணன், கம்ஸன், சிசுபாலன் என்பவர்களாக மாறி அவர்களுக்கே தாங்கள் எதை அனுஷ்டிக்க வேண்டும் என்பதில் மயக்கம் கொண்டு ஆஸ்திக நாஸ்திகர்களாய் உயிர் வாழ்கிறார்கள்.

காமாத் த்வேஷாத் பயாத் ஸ்னேஹாத்
யதா பக்த்யேஸ்வரே மன:
ஆவேஸ்ய ததகம் ஹித்வா
பஹவஸ்தத் கதிம் கதா:
கோப்ய: காமாத் பயாத் கம்ஸோ
த்வேஷாத் சைத்யாதயோ ந்ருபா
ஸ்ம்பந்தாத் வ்ருஷ்ணய: ஸ்னேஹாத்
யூயம் பக்த்யா வயம் ப்ரபோ
கதமோபி ந வேன: ஸ்யாத்
பஞ்சாநாம் புருஷம் ப்ரதி
தஸ்மாத் கேநாப்யுபாயேன
மன: க்ருஷ்ணே நிவேஸயேத்
…………………….என்றார் நாரதர்.
பகவானை அடைவதற்கு பக்தி ஒன்று மட்டும் காரணமல்ல. பகவானை அடைய காமம், த்வேஷம், பயம், ஸ்னேஹம், பக்தி என்ற ஐவகை உபாயமுள்ளதாக நாரதர் கூறினார். காமத்தை கோபிகைகளும், பயத்தை கம்ஸனும், த்வேஷத்தை சிசுபாலனும், பந்து ஸ்னேஹத்தை பாண்டவர்களும், பக்தியை நம்மில் பலரும் ஆராத்தித்து பகவானை அடைகிறோம் என்று நாரதர் விளக்கம் கூறுகிறார்.
ஒரு சில வேனர்கள் இருந்தனர். அவர்கள் பல நாஸ்திக ஆஸ்திகர்களை உருவாக்கியுள்ளார்கள். அவர்களையும் கடவுள் ரக்ஷிப்பார். நாம் அவர்களை “பாபிகளே என்று அழைத்து வகைப்படுத்தமாட்டோம். வசைபாடமாட்டோம். அது தான் நமது சமயத்தின் தர்மம்.
ஆங்கில மொழியில் நான்கு விதமாகப் வகைபடுத்தி மிகவும் தெளிவாக நம்மைக் குழப்புவர். அவர்களைப் பற்றிய விளக்கத்தை வலையில் நான் படித்தது; குழம்பியது.

An atheist agnostic is someone who does not believe in gods and also thinks that the existence of gods cannot be known. This might mean that they don’t believe in gods because they haven’t seen any evidence that supports their existence.
A theist gnostic is someone who believes in a god/gods and thinks that the existence of gods can be known. This position is usually referred to as just ‘theist‘, since people who believe in gods, usually also think that their existence can be known.
An atheist gnostic is someone who does not believe in gods, and who thinks that we can know that gods do not exist. A fairly unusual position, they might think they have found proof of the non-existence of gods, or might have been persuaded by life experiences.
A theist agnostic is someone who believes in gods, but thinks that they could not know for sure that their god exists. Another fairly unusual position, as people who have faith in gods usually also think that their god can be known to be real.