Saturday, April 20, 2013

Rudhra Geethai

ருத்ர கீதை என்ற ஸ்லோகங்களைப் பற்றி வலையில் தேடிய போது எனக்குக் கிடைத்த சில முக்கியத் தகவல்களை உங்களுடன் ஆராய்கிறேன். உங்களது கருத்துக்களையும், இதனைப் பற்றி நீங்கள் அறிந்த மற்றய தகவல்களயும் இந்த தபாலின் விமர்சனப் பகுதியை உபயோகித்து, எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
1. ருத்ர கீதை ஸ்ரீமத் பாகவதத்தில் வராஹ புராணத்தில் 70-72 பகுதிகளில் உள்ளது. நான்காவது ஸ்கந்தத்தில் 16லிருந்து 79 வது ஸ்லோகங்கள் ருத்ர கீதையாய் உள்ளன.
2.மொழி ஆராய்ச்சியாளர்கள் இந்த வேத புராணங்கள் எழுத்து வடிவில் 6th century B.C. to the 12th century A.D என்ற காலகட்டத்தில் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் அளிக்கின்றனர்.
3.புராணங்களை முக்கிய புராணங்கள் அல்லது மஹா புராணங்கள் மேலும் உப புராணங்கள் என்று வகைப் படுத்துகின்றனர்.
4. மஹாபுராணங்களில் உள்ள பஞ்ச கீதைகள் பின்வருமாறு
1. உத்தவ கீதா, 2. ருத்ர கீதா, 3. பிக்ஷு கீதா,
4.ஸ்ருதி கீதா, 5.ஹம்ஸ கீதா.
5. ருத்ரன் ப்ரசேதஸ் என்ற அரசனுக்கு பகவான் நாரயணரை எவ்வாறு பூஜிக்க வேண்டும், அதனால் அடையும் உயர்ந்த மார்க்கம் என்ன என்ற பல செய்திகள் உபதேசித்தார். அதுவே ருத்ர கீதை எனப்படும். இந்த கீதையைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையை இங்கே கொடுத்துள்ளேன். படித்து உங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment