Thursday, April 18, 2013

Ragasri Ramayanam

ஐம்பது வரிகளில் “ராகஸ்ரீயின் ராம காவியம்
குர்வர்த்தே த்யக்த ராஜ்யோ வ்யசரதநு வனம்
பத்ம பத்ப்யாம் ப்ரியாயா:
பாணிஸ்பர்ஷாக்ஷமாப்யாம் ம்ருஜிதபதருஜோ
யோ ஹரீந்த்ராநுஜாப்யாம்
வைரூப்யாச் சூர்பணக்யா: ப்ரிய விரஹருஷா -
ரோபித ப்ரூ விஜ்ரும்ப –
த்ரஸ்தாப்திர் பத்த ஸேது: கலதவதஹன:
கோஸலேந்த்ரோவதான்ன:
என்று சுகர் நான்கு வரியில் ராமாயணம் முழுவதையும் சொல்லி ராமனை த்யானிக்கிறார்.  முதன் முதலில் வால்மீகி ராமாயணம் தேவநாகரியில் எழுதப்பட்டது. 
இதனை ஆதாரமாகக் கொண்டு நமது இந்தியாவில் பல பாஷைகளில் பலர் காவியாமாகப் படைத்துள்ளார்கள். 50000 வரிகளில் வால்மீகியால் படைக்கப்பட்ட இந்த காவியத்தை கம்பன் தமிழில் 12வது நூற்றாண்டில் கம்பராமாயணமாகப் படைத்தான். 14வது நூற்றாண்டில் துளசி தாஸர் “ராமசரிதமானஸ் என்ற ஒருகாவியத்தை ஹிந்தியில் படைத்தார். ப்ரேமானந்த் என்பவர் குஜராத்தியிலும், க்ருத்திவாஸ் வங்காள மொழியிலும், பலராம தாஸ் ஒரியாவிலும், மராத்தியில் ஸ்ரீதரா என்பவரும், சந்தஜா என்பவர் மைதிலி என்ற மொழியிலும், 15ம் நூற்றாண்டில் ரங்கநாதா என்பவர் தெலுங்கிலும், 16வது நூற்றாண்டில் தொரவே ராமாயணா என்று கன்னட்த்திலும், துந்த்சத்து எழுத்தச்சன் மலயாளத்திலும் ராமாயண காவ்யத்தைப் படைத்து எல்லோருடைய மனத்திலும், உடலிலும் ராமாயணம் என்ற மூச்சுக் காற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
கீர்வானணை: அர்த்யமாநோ தஸமுக நிதனம்
கோஸலேஷு ரிஸ்ய ஸ்ருங்கே
புத்ரீயாமிஷ்டிம் இஷ்ட்வா த்துஷி தசரத –
க்ஷ்மாப்ருதே பாயஸாக்ர்யம்
தத்புக்த்வா தத் புரந்த்ரீஷ்வபி திஸ்ருஷு
ஜாதகர்பாஸு ஜாதோ
ராமஸ்த்வம் லக்ஷ்மணேன ஸ்வயமத
பரதேநாபி ஸத்ருக்ன நாமா
என்று ஆரம்பித்து, ஸ்ரீ நாராயண பட்டத்ரி 34, 35வது தஸகங்கள் மூலம் இருபது ஸ்லோகத்தால் ராமாயண காவ்யத்தை நமக்கு தந்துள்ளார். இதனை மூலமாகக் கொண்டு எங்களது தகப்பனார் திரு.ஸ்ரீநிவாச ராகவன் 50 வரிகளில் இந்தக் காவியத்தை தமிழில் படைத்து இசை அமைத்துள்ளார். “ராகஸ்ரீ என்ற அங்கிதத்துடன் 500க்கும் மேற்பட்ட பாடல்களைப் புனைந்துள்ளார். 
2000வருடம் தொடங்கியவுடன் ராகஸ்ரீ பாடல்களை, தொலக்காட்சி முன்னாள் இயக்குனர் திரு.ராம க்ருஷ்ணன் அவர்கள் (நாதமுனி நாராயண ஐய்யங்காரின் சீடர்),  இந்தியாவில் ம்யூசிக் அகாடமி மூலம் ப்ராபல்யப்படுத்தினார். அதே சமயம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல் நகரம் மூலமாக என் தமயனார் திரு.திருவையாறு க்ருஷ்ணன், ராகஸ்ரீ பாடல்களை Los Angeles SIMA மூலமாகக் கொண்டுவந்துள்ளார். எனது சகோதரி திருமதி.பூமா நாராயணனும், எனது சகோதரன் திரு.திருவையாறு க்ருஷ்ணனும் பரமாச்சாரியார் முன்னிலையில் பாடி ஆசி பெற்ற இந்த ராகஸ்ரீயின் ராம காவியத்தை, இன்று ராமநவமியை முன்னிட்டு, உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

5 comments:

  1. நரசிமஹனின் இனிய குரலோசையில் ராகமாலிகையாய் இழைந்து வரும் ராம காதை ராம நவமி அன்று ராமனின் அருளை அனைவருக்கும் அளிக்கும் என்பது திண்ணம். அழகான பாடல் வரிகள் அருமையான இசை இனிமையான குரலோசை எழிலான உணர்வுகள் வளர்க தங்கள் பணி . பாடல் வரிகள் இருந்தால் என்போன்றோருக்கு பயன் உள்ளதாக இருக்கும். நன்றி

    ReplyDelete
  2. It is a beautiful portrait in mellifluous musical rendition; I am sure that appa would have been more delighted to hear this permanent memory capsule than when he wrote this stellar samkshepa Ramayanam.

    Stellar contribution and let Maaruti be with you always.

    Love

    TSRK

    ReplyDelete
  3. As usual excellent rendition, keep it up chingan,
    VSN

    ReplyDelete