Monday, February 6, 2012

Supernatural Power

இன்று நான் ரசித்த செய்தி
ஆகாயத்தில் உள்ள ஸப்தங்களை க்ரஹிப்பதற்கு ஏரியல் உதவுகிறது என்பது விஞ்ஞானக் கூற்று. மஹரிஷிகளின் காதே ஏரியலாக இருந்திருக்கின்றது. தவத்தின் வலிமையால் அவர்களுக்கு எந்த ஸப்தத்தையும் கேட்கமுடிந்தது. இதைப் போல் திவ்ய த்ருஷ்டியால் உட்கார்ந்த இடத்திலேயே யாவற்றையும் பார்க்க முடிந்தது.
யுகாந்தே அந்தர்ஹிதான் வேதான் ஸேதிஹாஸான் மஹர்ஷய:
லேபிரே தவஸா பூர்வம் அனுஜ்ஞாதா: ஸ்வயம்புவன்
இந்தச் செய்தியைக் கூறியவுடன் நாத்திகன் நகைத்தான். விஞ்ஞானத்தைக் கொச்சைப்படுத்தாதே. அறிவு பூர்வமாக அணுகவேண்டும் என்று உபதேசித்தான்.
ஷான் எல்லிஸ் என்பவர் இன்றும் ஓநாய்களுடன் பேசுகிறார். அவைகளுடன் வாழ்கின்றார். அவரிடம் ஒரு அமானுஷ்ய சக்தி உள்ளது என்று விஞ்ஞானம் நிருபித்துள்ளது. இதனை ஏற்கும் அந்த நாத்திகன் ரிஷிகள் மந்த்ர ஸப்தத்தை உணர்ந்தார் என்பதை ஏற்க மறுக்கிறது.
இன்னல்கள் வரும் பொழுது ஆஸ்திகனாக மாறும் நம்மில் சிலர் பிறர் மத்தியில் தங்களை உயர்த்திக் கொள்ள நாத்திகனாக வேஷம் அணிகிறார்கள். இது அவர்களின் இயலாமையை உணர்த்துகிறது.

1 comment:

  1. ஓநாயின் பாஷை அவனுக்கு புரிகிறது
    ஓங்காரத்தின் மகிமை மக்களுக்கு புரியவில்லை.

    ReplyDelete