Monday, February 6, 2012

Saraguna Paalimpa - Poochi Srinivasa Iyengar

நான் ரசித்த பாடல்
ஸரகுண பாலிம்ப ஸமயமுரா நீகு
ஸரி எவ்வருன்னாருரா ஸரஸிஜ நேத்ரா
இந்தப் பாடலை உருவாக்கியவர் திரு. ராமனாதபுரம் ஸ்ரீநிவாஸ ஐய்யங்கார். அவரை பூச்சி ஸ்ரீநிவாஸ ஐய்யங்கார் என்றும் அழைப்பர். ஒரு சமயம் இவர் கடை வீதிக்கு சென்ற பொழுது வாழைப் பழத்தோலில் வழுக்கி விழுந்ததன் விளைவாக படுக்கையிலே பல நாட்கள் இருக்க வேண்டி வந்தது. சிகிட்சை பலன் அளிக்காததால் இந்தப் பாடலை எழுதிப் பாடி நமக்கு இந்த அற்புதமான ஸாஹித்யத்தை அருளினார். அன்று கஜேந்த்ரனுக்கு முதலையின் பிடியிலிருந்து காப்பாற்றினாய். இன்று கால் உடைந்து இருக்கும் என்னை காப்பாற்றமாட்டாயா என்று உள்ளம் உருகி பாடினார். திருமதி MSS அவர்கள் உருகிப்பாடுவதை நாமும் கேட்போம்.

No comments:

Post a Comment