Wednesday, January 26, 2011

ஒரு புதுமையான அனுபவம்

நேற்று காலை லாயட்ஸ் அரசு குடியிருப்பு வழியாக நான் சென்று கொண்டிருந்தேன். அங்கு உள்ள ஒரு சிவன் கோவிலில் ஒலி பெருக்கிமூலமாக வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் செய்த ஸஹஸ்ரநாமத்தினனைக் கேட்டுக்கொண்டே சென்றேன். அரை மணிநேரம் கழித்து திரும்பியபோதும் அது ஒலித்துக் கொண்டிருந்தது. ஆர்வ மிகுதியால் யார் யார் கேட்கிறார்கள் என்று சென்று பார்த்தேன். மூன்று பூ விற்கும் பெண்கள், கோவிலை சுத்தம் செய்யும் இருவர் என இந்த ஐவரும் மிகவும் ஈடுபாடுடன் அந்த ப்ரவசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
மகத்துவம் அவரின் குரலின் ஈர்ப்பா அல்லது அவர் அளிக்கும் செய்தியா அல்லது இன்றைய விஞ்ஞான வளர்ச்சியா? இடமோ சைவக் கோட்பாடுடையது; செய்தியோ, சொல்லுபவரோ வைணவம் சார்ந்தவர்; இந்த ஐவரும் எந்த சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள்? மெத்தப் படித்த நம்மவர்களுக்கு இந்த இரண்டு சிந்தாந்தமும் ஒன்று என்று நமக்கு உணர்த்த நடக்கின்ற சம்பவமா? "ஹரியும் ஹரனும் ஒன்றே என்று அறியதவரும் உளரோ" என்ற திரு.M.D.ராமநாதன் அவர்களின் பாடல் என் நினைவுக்கு வருகின்றது. எதுவாகினும் சரி நாத்திகம் மிகுந்த இந்தப் பிரதேசத்தில் இது நல்லதொரு திருப்புமுனை. திரு.வேளுக்குடி அவர்களுக்கு என்மனமார்ந்த வணக்கங்கள்.
மின்வலை ப்ரவசனத்தைப் பற்றி என்ன செய்தி சொல்கிறது என்று கீழே பார்ப்போம்.
“Pravachanam” is a Sanskrit word which means a discourse from a Guru on any matter related to spirituality or code of conduct. In the good old days of Guru-Shishya tradition, Gurus dedicated their lifetime propagating the principles they believed through “Pravachanams” to the interested Shisyas in particular, and to the common public in general. The spontaneous flow of words from these great souls is the “Amrita Dhara” (flow of nectar) which got the potential to rejuvenate the tired minds and act as the greatest motivator to orient them to the most meaningful path in life. 

No comments:

Post a Comment