Sunday, November 7, 2010

மான்பூண்டியா பிள்ளையின் கஞ்சிரா

அஹா என்ன அருமையான கச்சேரி. பாடியவர் குரல் வளமைதான் என்னே? என்று பல புகழாரம். அவரது அன்றைய கச்சேரி நன்றாக அமைந்ததற்கு காரணம் பக்கம் பலமாக இருந்ததுதான்.

பக்கவாத்யங்களில் ஒன்றான பக்கா வாத்யமான கஞ்சிராவை பார்த்திருக்கிறேன். வாசித்ததை கேட்டுள்ளேன். நானும் அதனின் ஒலியை எழுப்பியுள்ளேன். ஆனால் கஞ்சிராவின் சரிதத்தை நான் படித்ததில்லை. ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற ஒரு ப்ரமிப்பை நமக்கு “லலிதாராம் என்பவர் "carnaticmusicreview" என்ற இணையதளத்தில் “கமகம் என்ற தலைப்பில் தூய தமிழில் எளிய நடையில் உயிரோட்டமான வகையில் கொடுத்துள்ளார். அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 

No comments:

Post a Comment