Tuesday, April 13, 2010

தாமோதரனும் தாம்பக்கயிறும்

மஹா ஸ்வாமிகள் காஞ்சி பரமாச்சார்யாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சிறு சிறு சொற்பொழிவுகள் மூலம் நமக்கு பல அறிவியல் மற்றும் ஆன்மீக உண்மைகளையும் மிகவும் சுலபமாக புரியும் விதத்தில் சொல்லுவார். அந்த மஹா சமுத்திரத்திலிருந்து ஒரு துளியை அனுபவிக்கலாம் இங்கே.
 கயிறு என்றால் தெரியும். “தாம்பக் கயிறு என்று எப்படி வந்ததுஒரு சிறு பையன் கேட்டான். “அது அப்படித் தான் சொல்லவேண்டும்என்று ஒரு சமயோஜிதமான பதில்.
தாமோதரன் என்றால், கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன் என்று பொருள். தாமம் என்றால் கயிறு.
சில சமயம் நாம் “சூட் கேஸ் பொட்டி”, “கேட்வாசல்” , நடுசென்டர் என்று அடுக்கடுக்காக சொல்வோம். அதேபோல் தாமம் அல்லது கயிற்றால் கட்டுண்ட கண்ணனை, தாமோதரனை கயிற்றால் கட்டினார்கள் என்பர். அதுவே தாமக்கயிறு தாம்பக்கயிறு ஆயிற்று.

No comments:

Post a Comment